வினோஜ் பி. செல்வத்தை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்

வினோஜ் பி. செல்வத்தை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்

பிரச்சாரம்

புரசைவாக்கம் தானா தெருவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் புரசைவாக்கம் தானா தெருவில் பாஜக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வினோஜ் பி. செல்வத்தை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் .

பிரச்சாரத்தின் போது அண்ணாமலை பேசுகையில் ;வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முன்னேற, மத்திய சென்னை முன்னேற, சென்னையை மழை வெள்ளத்தில் இருந்து மீட்டெடுக்க, வினோஜ் P.செல்வத்தை வெற்றி பெறச் செய்வோம். பாரதப் பிரதமர்நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது பக்கம் இருக்கும் 400க்கும் அதிகமான ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிசையில் வினோஜ் P.செல்வத்தை அமர வைப்போம் என பேசினார் .பெரும் திரளென, ஒரு பொதுக்கூட்டம் போலக் கூடியிருக்கும் பொதுமக்கள், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள கூடியிருப்பது தமிழகத்தின் அரசியல் மாற்றம், நமது தலைநகரத்தில் நிச்சயம் நடக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள் என்றார்.ஒருமுறை, பாஜகவுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். சென்னையில் மழை நீர் தேங்காமல் பாஜக தீர்வு காணும் என பிரச்சாரம் செய்தார் .

Tags

Next Story