விதி மீறல் பட்டாசு ஆலைகள் - உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

விதி மீறல் பட்டாசு ஆலைகள் - உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
ஆலைக்கு சீல் (பைல் படம்)
சிவகாசியில் விதிமீறலில் ஈடுபட்ட 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தனி வட்டாட்சியர் திருப்பதி பரிந்துரை செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொடர் வெடி விபத்து ஏற்பட்ட பல பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டன.

அதன் பேரில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான வருவாய் அதிகாரிகள் சிவகாசி அருகே கீழத்திருத்தங்கலிலுள்ள அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான ராமகிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த போது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் பணியாளர்களைக் கொண்டு,சட்ட விரோதமாக மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்ததும்,பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததும் தெரியவந்தது

மேலும் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக தகர செட்ட அமைத்து பட்டாசு உற்பத்தி செய்ததும்,மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது, மேலும் விருதுநகர் அருகே துலுக்கபட்டியிலுள்ள அலங்கார் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தபோது,முழுமையடையாத பட்டாசுகள் மற்றும் வெடிகள் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும்,சட்ட விரோதமாக தகரசெட் அமைத்தும், மரத்தடியிலும் பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தனி வட்டாட்சியர் திருப்பதி பரிந்துரை செய்தார்.

Tags

Next Story