சிவகாசியில் பட்டாசு கடையில் விதிமீறல்

சிவகாசியில் பட்டாசு கடையில் விதிமீறல்
சிவகாசியில் பட்டாசு கடையில் விதிமீறல்.உரிமையாளர் கைது..
சிவகாசியில் பட்டாசு கடை நடந்த ஆய்வில் வீதி மீறல் தொடர்பாக .உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாசில்தார் வடிவேல் உத்தரவின்படி அனுப்பன்கு ளம் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் அந்த பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அனுப்பன்குளம் இலங்கை அகதிகள் முகாம் அருகில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு கடையில் விதிகளை மீறி பட்டாசுகளை பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகளின் உத்தரவுப்படி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடையில் இருந்த சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த குமரவேல் மகன் ராஜாகுட்டி (வயது 41) என்பவரை கைது செய்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story