தேர்தல் நடத்தை விதிமீறல் - பாரிவேந்தர் உட்பட 10 பேர் மீது வழக்கு

வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை விதியை மீறிய ஐ ஜே கே நிறுவனர் பாரிவேந்தர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தர் மார்ச் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வேட்பாளர் உட்பட ஐந்து பேர் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தியும் அதை மீறி10 பேருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாக ஐஜேகே நிறுவனரும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் உட்பட 10 பேர் மீது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி அளித்த புகாரின் பேரில், மார்ச் 25ஆம் தேதி IPC 143, 188 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story