தேர்தல் விதிமுறை மீறல் - புகார் எண் அறிமுகம்

தேர்தல் விதிமுறை மீறல் - புகார் எண் அறிமுகம்

பைல் படம் 

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கான தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பான புகார் மற்றும் தகவல்களை அளிக்க பொது பார்வையாளர் மொபைல் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதனையொட்டி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி), கெங்கவல்லி(தனி), ஆத்துார் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்காணித்திடவும், தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொதுப்பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக்குமார் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களும், அவரது மொபைல் எண்ணில் - 93639 66536 தொடர்பு கொள்ளலாம். மேலும், காலை 9:00 முதல் 10:00 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறையின் பயணியர் விடுதியில் தங்கியுள்ள தேர்தல் பொதுப்பார்வையாளரிடம் நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் புகார் மற்றும் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story