திருமங்கலத்தில் வைரலாகும் வீடியோ

திருமங்கலத்தில் வைரலாகும் வீடியோ

பார்வையற்றவர் பத்திரமாக மீட்பு

மதுரை திருமங்கலம் மறவன்குளம் சாலையில் பார்வையற்ற பேனா வியாபாரி சாலையின் நடுவே சுற்றித்திரிந்தவரை ஆம்புலன்ஸ் டிரைவர் பத்திரமாக மீட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையும் இணைக்க கூடிய மறவன் குளம் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் பார்வையற்ற பேனா வியாபாரி கவலையாக சாலையில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பார்வையற்ற பேனா விற்பனை செய்து வரும் மாற்றுத்திறனாளி சாலையின் ஓரத்தில் இருந்து நடந்து வந்து சாலை நடுவே வந்துள்ளார்.

தொடர்ந்து சாலையின் வலது புறம் இடது புறம் என எதுவும் அறியாமல் சாலையின் நடுவே சுற்றி திரிந்தார் ஒரு கட்டத்தில் மயக்கம் அடைந்து சாலையின் நடுவே விழுந்து கிடந்தார்.

தொடர்ந்து அந்நேரத்தில் எவ்வித கனரக வாகனமும் நான்கு சக்கர வாகனமும் அவர் மீது மோதாமல் இருந்தது இந்த நிலையில் அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கவலையாக சாலையில் வந்து கொண்டிருந்த காவலர் அவரை அங்கிருந்து மீட்டு சென்று பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இந்த மாற்றத்தினால் கண் தெரியாமல் சாலையின் நடுவே அங்கும் இங்கும் சுற்றி திரிந்த பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவரின் மனதை கலங்க வைத்துள்ளது.

Tags

Next Story