விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

அம்பு போடுதல் நிகழ்ச்சி 

விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நவராத்திரி விழாவும் 10 நாட்கள் நடைபெறும். இதனை அடுத்து இந்த ஆண்டு நவராத்திரி 10 நாள் விழாவானது கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் மலைமேல் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் அமைத்து விநாயகர் பூஜையுடன் நவராத்திரி முதல் நாள் விழாவானது தொடங்கியது. அன்று முதல் தினமும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு இன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். பின்னர் அம்பு போடுதல் நிகழ்ச்சி சோதனைசாவடி அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags

Next Story