விருத்தாசலம்: 6 சிறுவர்கள் கைது

விருத்தாசலம்: 6 சிறுவர்கள் கைது

பழைய விருதகிரிகுப்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கலாட்டா செய்த 17 வயது சிறுவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

பழைய விருதகிரிகுப்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கலாட்டா செய்த 17 வயது சிறுவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பழைய விருதகிரிகுப்பம் பகுதியில் 17 வயதுடைய 6 சிறுவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொண்டு சத்தம் போட்டனர். இதைபார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு ஊ‌. மங்கலம் போலீசார் விரைந்து சென்று அந்த 6 சிறுவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்

Tags

Next Story