உணவு வாங்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

உணவு வாங்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
சைக்கிளில் சென்ற சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.

விருதுநகர் பரங்கிநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய 16 வயது மகனான கணேஷ் பாண்டி கடந்த 27ஆம் தேதி இரவு மதுரை சாலையில் உள்ள கடையில் சாப்பாடு வாங்குவதற்காக சைக்கிள் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையைச் சார்ந்த சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணேஷ் பாண்டி காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து கணேஷ் பாண்டியன் தந்தை பாண்டியராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story