முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான  குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story