விருதுநகர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

விருதுநகர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவபிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்..
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட முழுவதும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து மே மாதம் பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளும் காவல் துறையினரும் இணைந்து பெட்டிக் கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தினர்.33 பெட்டிக்கடைகளில் 90 கிலோ எடையுள்ள ரூ.90,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக 33 பெட்டிக்கடைகள் சீல் வைக்கப்பட்டு ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம்,15 நாட்களுக்கு கடை மூடி சீல்,2வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல்,3வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம்,மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் செய்தி குறிப்பில் வெளியீட்டுள்ளார்.மேலும் தொடர்ந்து ஆய்வு செய்ப்படுமென்றார்.

Tags

Next Story