விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் மாவட்டதில் பயிற்சி இல்லாதவர்கள் வைத்து கொண்டு பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் l,

அரசு உத்தரவின் படி பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என ஒரு மாத கால பயிற்சி சிவகாசி பட்டாசு பயிற்சி மையத்தில் பயிற்சி பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த பயிற்சியை ஒரு மாத காலம் இருப்பதால் பட்டாசு ஆலையின் உற்பத்திகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழு கூட்டத்தில், ஆலை உரிமையாளர்கள் தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் இந்த பயிற்சியை முழு நேரப் பயிற்சியாக 1 வாரத்திற்கு அளிக்க மாற்றி அமைத்தார்.

இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை முழு நேர பயிற்சியாக மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து பயிற்சிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 35 ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு முன்பாக 35 பட்டாசு ஆலைகளுக்கு பயிற்சி தேதி குறிப்பிட்டு தகவல் அனுப்பப்படும்.

முதல் கடிதத்தின் அடிப்படையில் வருபவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் அவர்கள் ரூ.5000/- தண்ட கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாம் முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் அவர்கள் ரூ.10000தண்ட கட்டணம் செலுத்த வேண்டும்.

நான்காம் முறை கடிதம் எழுதியும் பயிற்சிக்கு வரத்தவறினால் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்து பட்டாசு ஆலை போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் இந்த 1 வார கால பயிற்சியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கால வரைமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அடிக்கடி ஏற்படும் பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்கவும் உயிர் சேதங்கள் இல்லாமல் உற்பத்தியை மேற்கொள்ளவும் தொழிலாளர்களுக்கும், போர்மேன் மற்றும் மேலாளர்களுக்கும் இந்த பயிற்சிகள் முக்கியமானதாக இருக்கிறது. இதை உணர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் செயல்பட வேண்டும்.

பயிற்சி பெறாத தொழிலாளர்களே அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு ஒரு காரணமாகவும் இருப்பதால் நிர்ணயித்த காலகெடுவுக்குள் பயிற்சியை முடிக்காத போர்மேன்கள், கண்காணிப்பாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளும் பட்சத்தில் உற்பத்தி நிறுத்தம் போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story