கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவானி கிருஷ்ணாபுரம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர். கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில், திருவிழா காலங்களில் ஆடு உறிக்கும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராமரின் உறவினர்களான பசுபதி ( 22) கணியன் (36), வியக்குமார் (19) ஆகியோரும் கொத்தனார் மற்றும் ஆடு உறிக்கும் அதே தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமர் என்பவர் ராஜபாளையம் அருகே திருவிழா ஒன்றில் ஆடு உறித்து விட்டு மதுரை ரோட்டில் உள்ள அண்ணாச்சி ஹோட்டல் முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த பசுபதி, கணியன், விஜயகுமார் ஆகியோர் ராமரை வழிமறித்து ஆடு உறிக்கும் கத்தியை தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.

அதில் கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் வெட்டியதில் ராமர் காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராமரிடம் விசாரணைநடத்தினர். பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

எனினும் நீதிமன்ற ஜாமினில் மூவரும் வெளிவந்ததாக கூறப்படுகிறது. பட்டப் பகலில் அறிவாளை வைத்து தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story