அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றிய நகராட்சி ஊழியர்கள்

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டதை, அடுத்து தேர்தலுக்கான நடைமுறை விதிகள் அமலுக்கு வந்தது தேர்தலுக்கான இந்த விதிமுறைகள் அமலில் உள்ள போது அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களோ அரசியல் கட்சியின் தலைவர்களின் புகைப்படமோ சுவரொட்டியாக ஒட்டப்பட்டு இருக்க கூடாது என்ற விதிமுறை இருப்பதால் இந்த விதிமுறையை நிறைவேற்ற விருதுநகர் நகராட்சி சார்பாக நகராட்சிக்கு உட்பட்ட டிடிகே சாலை நகராட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள கட்சி சார்ந்த சுரொட்டிகளை அகற்றும் பணியில் நகராட்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டனர் அதை தொடர்ந்து நகராட்சி நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு வெள்ளை நிற துணியை வைத்து சிலை முழுவதும் மறைத்தனர்.

Tags

Next Story