விருதுநகர்: பாமாயில் விலை உயர்வு, பருப்பு விலை சரிவு

விருதுநகர்:  பாமாயில் விலை உயர்வு, பருப்பு விலை சரிவு
துவரம் பருப்பு 
விருதுநகர் சந்தையில் பாமாயில் விலை உயர்ந்து காணப்பட்டது. துவரம் பருப்பு, பட்டாணி பருப்பு மற்றும் பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியில் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன் விபரம் வருமாறு : பாமாயில் விலை 15 கிலோ கடந்த வாரம் ரூ.1345 என இருந்தது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. எனவே, ரூ.1360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

துவரம் பருப்பு புதுஸ் லையன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.15ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்தது. எனவே, இதன் காரணமாக மூட்டை ஒன்றுக்கு ரூ.800 வரை சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வாரம் ரூ.14,200 என விற்பனையாகிறது.

பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.10,375 என விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.175 வரை குறைந்துள்ளது. எனவே, இந்த வாரம் ரூ.10,200 என விற்கப்படுகிறது.

கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5600 என விற்ற நிலையில், இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.5700க்கு விற்பனையாகிறது. பட்டாணி பருப்பு இந்தியா வகையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.7ஆயிரம் என விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.6700 என விற்பனை செய்யப்படுகிறது.

பட்டாணி பருப்பு வெள்ளை இந்தியா புதுஸ் வகையானது 100 கிலோ ரூ.6650 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.50 மட்டும் குறைந்து தற்போது ரூ.6600 என விற்கப்படுகிறது. உளுந்து லையன் வகையானது 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,300 என விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 மட்டும் குறைந்துள்ளது. எனவே மூட்டை ஒன்று ரூ.10,200 என விற்பனையாகிறது. அதேவேளை, பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Next Story