விருதுநகர் : உச்சத்தை தொட்ட உளுந்தம் பருப்பின் விலை

விருதுநகர் : உச்சத்தை தொட்ட உளுந்தம் பருப்பின் விலை

பைல் படம் 

விருதுநகர் சந்தையில் உருட்டு உளுந்தம் பருப்பின் விலை திடீரென உச்சபட்ச விலைக்கு சென்றது. இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், குண்டூர் வத்தல் மற்றும் கடலை எண்ணெய், பட்டாணி பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த வாரம் ரூ. 2800க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 மட்டும் குறைந்துள்ளது. எனவே, ரூ.2750க்கு விற்பனை செய்யப்படுகிறது. குண்டூர் வத்தல் 100 கிலோ கடந்த வாரம் ரூ.16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் வரை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.12,900 என விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.3600 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.16,500 என விற்பனை செய்யப்படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,400 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைந்துள்ளது. எனவே, ரூ.10,200க்கு விற்கப்படுகிறது.

கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5,300 க்கு விற்பனையானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.5,200 என விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி பருப்பு இந்தியா வகை 100 கிலோ ரூ.5400க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைந்துள்ளது. எனவே மூட்டை ஒன்று ரூ.5200க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளை பட்டாணி வகை 100கிலோ ரூ.6ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.1500 வரை குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.4450 முதல் 4500 வரை விற்கப்படுகிறது. பாசிப்பயறு இந்தியா வகை கடந்த வாரம் ரூ.9500க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.300 வரை குறைந்துள்ளது. எனவே, குவிண்டால் ஒன்று ரூ.9,200க்கு விற்கப்படுகிறது. அதேவேளை பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Next Story