விருதுநகர் : வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலர் மரு.தாரேஸ் அகமது, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாணடியன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story