நாமக்கல்லில் விசிக ஆர்ப்பாட்டம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி விசிக ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்,நாமக்கல் மைய மாவட்ட செயலாளர் நீல வானத்து நிலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுனன், மேற்கு மாவட்ட செயலாளர் முகிலன், சேலம், நாமக்கல் மண்டல துணைசெயலாளர் அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் வாக்காளர் எந்த சின்னத்தில் வாக்களித்தாரோ அந்த சின்னத்தின் ஒப்புகை சீட்டை வாக்களிக்கும் வாக்காளருக்கு வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story