நெல்லைக்கு வந்து இறங்கிய பறவைகள்

நெல்லைக்கு வந்து இறங்கிய பறவைகள்

வெளிநாட்டு பறவைகள் வருகை

நெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தற்போது மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இக்குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. இதன் காரணமாக வெளிநாட்டு பறவைகள் படை எடுத்து வர தொடங்கியுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து அதிகளவில் பறவைகள் இங்கு வந்துள்ளன. இதனை பறவை ஆர்வலர்கள் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

Tags

Next Story