விவேகானந்தா கல்லூரியில் விபத்தில் தந்தையை இழந்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய தாளாளர்

விவேகானந்தா கல்லூரியில் விபத்தில் தந்தையை இழந்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய தாளாளர்

மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய தாளாளர்

விபத்தில் தந்தையை இழந்த விவேகானந்தா பொறியியல் கல்லூரி மாணவிகள் மூன்று பேருக்கு 5.50 லட்சம் படிப்பு உதவித்தொகை தாளாளர் டாக்டர்.மு.கருணாநிதி வழங்கினார் .

திருச்செங்கோடு எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஜனனி,பிரியங்கா மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சிவரஞ்சனி ஆகியோர்களின் தந்தைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். கல்வி கட்டணம் செலுத்தி படிப்பை தொடர முடியாத ஏழ்மை நிலையில் மேற்படி மாணவிகள் மூவரும் இருப்பதை அறிந்த கல்லூரித் தாளாளர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்கள், மூன்று பேரின் கல்வி கட்டணம் ரூபாய் 5 லட்சத்து ஐம்பதாயிரத்தை கல்லூரி அறக்கட்டளை மூலம் செலுத்தி மாணவிகளின் படிப்பை தொடர ஏற்பாடு செய்தார்.

இது குறித்து தாளாளர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்கள் கூறியதாவது, மாணவிகள் கல்வி பயிலும் காலத்தில் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நிலையில் உள்ள தந்தை உயிரிழந்தால் அறக்கட்டளை மூலமாக அவர்களின் படிப்பை நிறைவு செய்ய ஆவண செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story