விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா

‘கலாச்சாரம், பண்பாடு மறக்காத கல்வியும் படிப்பும் மாணவிகளுக்குத் தேவை’ விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா விழாவில் நகைச்சுவை நாவலர் புலவர் ராமலிங்கம் சிறப்புரை.

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்கங்களான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, இரபீந்தரநாத் தாகூர் மகளிர் கல்வியில் கல்லூரி, விஸ்வபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டு விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் திருமதி கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, முதன்மை நிர்வாகிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் குமாரவேல் முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஆரோக்யசாமி, டாக்டர் அழகுசுந்தரம், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ்குமார், விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆரோக்யசாமி, இரவீந்தரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அழகுசுந்தரம் ஆகியோர் தத்தம் கல்லூரிகளின் மாணவியர் மற்றும் பேராசிரியர்களின் கல்விச் சாதனைகளுக்கான ஆண்டறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நாவலர் புலவர் ராமலிங்கம் கலந்து கொண்டார். அவர் தனது சிறப்புரையில், ‘கலாச்சாரம், பண்பாடு மறக்காத கல்வியும் படிப்பும் மாணவிகளுக்குத் தேவை; பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் இளைய தலைமுறையினர் மதிக்க வேண்டும்; மாணவிகளின் நலனில் அக்கறை கொள்பவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே’ என்று குறிப்பிட்டார்.

விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தனது தலைமையுரையில், “மாணவிகள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பெற வேண்டும்; ஒரு பெண் பண்பாட்டுடன் வாழந்தாள் ஒட்டுமொத்த குடும்பமும் தலை நிமிரும்’ என்று குறிப்பிட்டார்.

அதன்பிறகு துறைவாரியாக, பல்கலைக்கழக கழக பாடவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி, முதன்மை நிர்வாகி பேராசிரியர் வரதராஜீ, முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஆரோக்யசாமி, டாக்டர் அழகுசுந்தரம், டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர் ஆகியோ வழங்கினர்.

ஆண்டு விழாவில் விவேகானந்தா கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரிகளைச் சார்ந்த 2,000 மாணவிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் பிரபாகரன், துறைத்தலைவர்கள் பேராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் தனலட்சுமி, டாக்டர் கலைவாணி, டாக்டர் லோகநாயகி, டாக்டர் மைதிலி, டாக்டர் அபிதா, பேராசிரியர் சுகுணா, டாக்டர் பிரபுகுமார், டாக்டர் மெய்வேல் மற்றும் சங்ககிரி விவேகானந்தா கல்வி குழுமத்தின் மாணவியர் அமைப்பினர்; சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story