விவேகானந்தர் பிறந்த நாள் விழா

விவேகானந்தர் பிறந்த நாள் விழா

விவேகானந்தர் பிறந்த நாள் விழா 

கள்ளக்குறிச்சி மாவட்ட சுவாமி விவேகானந்தர் தேசிய பேரவை சார்பில் நடைபெற்ற விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சுவாமி விவேகானந்தர் தேசிய பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சேவா பாரதி மாவட்ட தலைவர் சின்னதம்பி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.

சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவர்கள் 150 பேர்களுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் அனைவரும் விவேகானந்தரின் உயர் சிந்தனைகளை தினமும் எழுதுவதுடன், நமது வாழ்வியலில் அதனை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story