விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்,
போட்டித்தேர்வுக்காக பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டு நிகழ்ச்சி விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் வரும் 14ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
போட்டித் தேர்வுக்காக பயிலும்/பயின்று வருகின்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.
மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்:04562-252068, தொடர்புக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.