வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 3ம் ஆண்டு கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் பயிற்சி முகாம் கடந்த 1ம் தேதி தொடங்கியது.இதில் மாணவர் மற்றும் மாணவிகள் என 50 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் நிறைவு நாளான நேற்று நிறைவு விழாவிற்க்கு காவல் துணை கண்காணிப்பாளர் கே.எம். மனோகரன் தலைமை ஏற்று பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கி பாராட்டு தெரிவித்தார்

.இப்பயிற்சி முகாம் நிறைவு விழாவில் தர்மபுரி மாவட்ட கைப்பந்து குழு உறுப்பிணர்களும், சேலம் மாவட்ட A.R.பாய்ஸ் கைப்பந்து குழு உறுப்பிணர்களும் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை பாலக்கோடு நண்பர்கள் கைப்பந்து குழுவிணர் செய்திருந்தனர்.

Tags

Next Story