அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

காந்திநகரில் அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்ப்பட்ட நிலையில் காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2- வது வார்டு காந்திநகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே குழந்தைகளை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கருந்து 2 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதாவது, குழந்தைகள் வாந்தி எடுக்க காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story