சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 

சிதம்பரம் அருகே சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்‌ ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் சாக்காங்குடியில் சத்துணவு உண்ட பள்ளி மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரணை விழுந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் தெரிய வந்தது.
Next Story