ராஜகிரி சித்தர் மடத்தில் பூரட்டாதி வழிபாடு!

ராஜகிரி சித்தர் மடத்தில் பூரட்டாதி வழிபாடு!

ராஜகிரி சித்தர்பீடம்

விராலிமலை அருகே அமைந்துள்ள ராஜகிரி சித்தர் பீடத்தில் இன்று பூரட்டாதி வழிபாடு நடைபெற்றது.
விராலிமலை அருகே ராஜகிரியில் அமைந்துள்ள மகான் சுருளி குழந்தைவேலு சித்தர் மடத்தில் அவர் முக்தியடைந்த பூரட்டாதி நட்சத்திர நாளில் மாதம் தோறும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று கோ பூஜை நடந்தது. பின்னர் சித்தர் பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னம் பாலிப்புடன் மாதேஸ்வர பூஜை நடந்தது. இதில் புதுகை மட்டுமின்றி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் நடந்தது.
Read MoreRead Less
Next Story