வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பு விழிப்புணர்வு

ராஜகிரி ஊராட்சியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேர்மையாக 100% வாக்கு அளிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜகிரி ஊராட்சியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தை 100% அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரங்கோலி கோலம் வரைதல், உறுதிமொழி ஏற்றல், பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், மற்றும் வங்கி போன்ற இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டுதல், மற்றும் மனித சங்கிலியின் மூலம் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் பாபநாசம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலும், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையிலும் நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சிகளின்போது பாபநாசம் சரக வருவாய் ஆய்வாளர், சுந்தரேசன் பாபநாசம் சரதத்திற்குட்பட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Tags

Read MoreRead Less
Next Story