சங்கரன்கோவிலில் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவிலில் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


சங்கரன்கோவிலில் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் தனது பிரச்சாரத்தை சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்திநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ அக்னி காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த ஜான்பாண்டியன் அவர்கள் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து நெடுங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜான் பாண்டியன் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், புளியம்பட்டி, பெரும்பத்தூர், குவளைக்கண்ணி, ஒப்பணையாள்புரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதுகுடி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story