பாஜகவினர் செண்டை மேளத்துடன்  வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

பாஜகவினர் செண்டை மேளத்துடன்  வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

நாகர்கோவிலில் பாஜகவினர் செண்டை மேளத்துடன்  வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகிய இரு தேர்தல்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்க இருக்கின்றன. இதற்கான பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று நாகர்கோவிலில் கோட்டார், கம்பளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செண்டை மேளங்கள் முழங்க வீடு வீடாக சென்று பாஜகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமாறு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தில் குமரி மாவட்ட பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் இந்த வாக்கு சேமிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags

Next Story