தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

தாராபுரத்தில்   திமுக வேட்பாளரை ஆதரித்து  வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தாராபுரம் 2-வது நாளாக நகராட்சி கவுன்சிலரும், நகர துணை செயலாளருமான வி.கமலக்கண்ணன் வாக்கு சேகரித்தார்.


இந்தியா கூட்டணி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தாராபுரம் 2-வது நாளாக நகராட்சி கவுன்சிலரும், நகர துணை செயலாளருமான வி.கமலக்கண்ணன் வாக்கு சேகரித்தார்.

தாராபுரம், மார்ச்.27- ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்ட ணியில் தி.மு.க. சார்பில் தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடு கிறார். வேட்பாளர் கே.இ.பிர காசை ஆதரித்து தாராபுரம் நகராட்சி 16-வது வார்டு பகு தியில் 16-வது வார்டு கவுன்சிலரும், தாராபுரம் நகர துணை செயலாளருமான வி.கமலக்கண்ணன் நேற்று முன்தினம் வாக்கு சேகரித் தார்.

இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாகதாராபுரம் 16- வது வார்டு பகுதியில் நக ராட்சி கவுன்சிலரும், நகர துணை செயலாளருமான வி.கமலக்கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் 75-க்கும் மேற்பட்ட வீடுகளில் திண்ணை பிரசாரம் மேற் கொண்டார். குளத்து புஞ்சை தெருமற்றும் பஜனை மடத்தெரு உள்ளிட்ட பகுதி களில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.அப்போது வார்டு பிரதி நிதி ரவீந்திரன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் மாரிமுத்து, பர்க்கத் நிஷா, ஜீவா ஷாஜகான், அருண், மாரிமுத்து, பிரவீன், ராஜ், சந்திரன், ரமேஷ், காளிதாஸ் சங்கர் உள்ளிட்டோர் கலந் துகொண்டனர்.

Tags

Next Story