வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
![வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி](https://king24x7.com/h-upload/2024/03/11/431435-image3a481545.webp)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மேலகரம் பேரூராட்சியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு எனது வாக்கு! எனது உரிமை! எனது கடமை! என்ற செயல்பாட்டின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நேற்று மேலகரம் சமுதாய நலக்கூடத்திலிருந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இம்மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் 280 ஆண்களும் 220 பெண்களும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000 மற்றும் நான்கு முதல் பத்து பரிசுகள் பெற்றவர்களுக்கு ரூ. 1000 என வழங்கப்பட்டது.