வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.  

தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கம், தஞ்சாவூர் உட்கோட்டம் சார்பில், "வாக்கு செலுத்தும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்" என்ற விழிப்புணர்வு உறுதிமொழி இயக்கம் வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.ஜெனார்தனன் தலைமை வகித்தார். பி.சந்திரசேனன் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, சாலைப் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் கு.பழனிசாமி, சாலை ஆய்வாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சாலைப் பணியாளர் சங்க ஒரத்தநாடு வட்டச் செயலாளர் தம்பி அய்யா உறுதிமொழி வாசிக்க, தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிறைவாக கோட்டப் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

Tags

Next Story