திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வகையில் தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன் ஜித் கவுர் இ.ஆ.ப.தலைமையில் உறுதிமொழி ஏற்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிடார்,

பின்னர் மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணி நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் கு.செல்வராசு மகளிர் திட்ட இயக்குநர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்வேப், பெருமாள் உதவி திட்ட அலுவலர், நகர காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம்,

மற்றும் நகராட்சி ஊழியர்கள் மகளிர் திட்ட பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story