சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் தனியார் பள்ளியில் வைத்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியானது திருவேங்கடம் சாலையில் தொடங்கி நகரில் பிரதான சாலையில் வழியாக சென்று சுவாமி சன்னதி முன்பு முடிவடைந்தது . இந்த விழிப்புணர்வு பேரணியின் போது 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தியபடி சைக்கிளில் பேரணியாக சென்றனர். இறுதியில் சுவாமி சன்னதியில் வைத்து கோட்டாட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பரமசிவம் மற்றும் பள்ளி தாளாளர் பழனி செல்வம். செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story