நரிக்குறவர் காலனியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தணிகைபோளூர் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வாக்களிப்பது அனைத்து மக்களின் கடமை, வாக்களிப்பது தனி மனித உரிமை, 100 சதவீதம் தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம், வாக்களிப்பதற்கு பணம் பெற மாட்டோம் போன்ற வாசகங்களை வண்ண கோலங்கள் போடப்பட்டும், கையில் பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். இதில் தணிகைபோளூர் ஊரட்சி மன்ற செயலாளர் தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story