திருமருகலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருமருகலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்

நாகை மாவட்டம் திருமருகலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருமருகலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி,கையொப்ப இயக்கம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருமருகலில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) மரியதாஸ் தலைமையிலும்,

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால்,ஜவகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த பேரணி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி சந்தைப்பேட்டை கடைத்தெரு வழியாக திருமருகல் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.பின்னர் பஸ் நிலையத்தில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கையொப்பமிட்டு தங்களது வாக்குப்பதிவை உறுதி செய்தனர்.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாறன் மற்றும் அரசு அலுவலர்கள்,அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்து பலர் கொண்டனர்.

Tags

Next Story