வாக்காளர் விழிப்புணர்வு பேரணி !

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி !

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

இந்திய நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து பழனியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து பழனியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் தேர்தல் வாக்குகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழனி பேருந்துநிலையம் அருகே பழனி கோட்டாட்சியர் சரவணன், பழனி டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். பழனி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்களிக்காமல் இருப்பது தேசவிரோதம் என்ற விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியபடி கோஷமிட்டனர்.

Tags

Next Story