வாக்காளர் பட்டியல் சரிபார்த்த அ. தி. மு. க. வினர்

வாக்காளர் பட்டியல் சரிபார்த்த அ. தி. மு. க. வினர்

குமாரபாளையத்தில் வாக்காளர் பட்டியலை அ. தி. மு. க. வினர் வீடு வீடாக சென்று சரி பார்த்தனர்.


குமாரபாளையத்தில் வாக்காளர் பட்டியலை அ. தி. மு. க. வினர் வீடு வீடாக சென்று சரி பார்த்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாக்காளர் பட்டியலை அ. தி. மு. க. வினர் வீடு வீடாக சரி பார்த்தனர். பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி, அரசியல் கட்சியினர் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்வது, தங்கள் ஆட்சியின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது, வார்டுவாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி, கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட கேட்டுக்கொள்ளுதல், சுவர் விளம்பரம் எழுதுதல், என்பது உள்ளிட்ட பல பணிகள் செய்து வருகிறார்கள். இதன் முக்கிய அம்சமாக வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணிதனை அ. தி. மு. க. வினர் நகர செயலர் பலசுப்ரமணி தலைமையில் செய்தனர். வாக்காளர் பட்டியலில் உள்ளபடி, வாக்காளர்கள் அதே வீட்டில் உள்ளார்களா? அந்த வீட்டு பெண், திருமணமாகி சென்று விட்டாரா? மகன், மகள், உயர் கல்வி கற்க, அல்லது பணிக்கு வெளியூர் சென்றுவிட்டார்களா? என்பது உள்ளிட்ட விபரங்கள் சேகரித்து, வெளியூரில் இருப்பவர்கள் வசம் தேர்தல் நாளில் வந்து விட கேட்டுக்கொண்டனர். நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story