வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் தொகுதியில் 100% வாக்கு பதிவை முன்னிட்டு வாக்காளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல், பொன்னிமாந்துறை ஊராட்சியில் திண்டிமாவனம் குழுவினர் உருவாக்கியுள்ள மியாவாக்கி காட்டில் திண்டிமாவனம் தன்னார்வலர்கள் மற்றும் முதல்நிலை வாக்காளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமையில் இன்று வாக்காளர் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர், "இந்தியக் குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதத்தின் தாக்கம் இல்லாமல் வாக்களிப்போம்” என வாக்காளர் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர்.

Tags

Next Story