வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம், குண்ணத்தூர் கிராமத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மேற்பார்வையார் ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் , எவ்வித தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் கூறி பள்ளி மாணவர்கள் முன் கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story