எலவனூர் ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

எலவனூர் ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி எடுத்துக் கொண்ட அதிகாரிகள்

எலவனூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டத்து.

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவனூரில், இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், க. பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, எழவனூர் ஊராட்சி மன்ற தலைவி இந்துமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அது தொடர்பாக உறுதிமொழி ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், வாக்காளர் உறுதி மொழியை, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வாசிக்க, அதனை தொடர்ந்து அனைத்து அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் வாக்காளர் உறுதி மொழியை ஏற்றனர்.

Tags

Next Story