வாக்காளர்களை அழைத்துச் செல்லக்கூடாது - தேர்தல் ஆணையம் 

வாக்காளர்களை அழைத்துச் செல்லக்கூடாது - தேர்தல் ஆணையம் 

வாக்குச்சாவடிக்கு வாகனத்தில் வாக்காளர்களை அரசியல் கட்சிகள் அழைத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


வாக்குச்சாவடிக்கு வாகனத்தில் வாக்காளர்களை அரசியல் கட்சிகள் அழைத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிவடையும் முந்தைய 48 நேரத்திற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை 19.04.2024 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளன்றும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணிநேரத்திலும் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் 17.04.2024 அன்று மாலை 06.00 மணி முதல் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு முடிவடையும் வரை நடைமுறையிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் கீழ்கண்டவற்றை கட்டாயமாக அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினராலும் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களும் நடத்தக்கூடாது எவ்வித தேர்தல் தொடர்பான தகவல்களையும் ஒளிப்பதிவு, தொலைக்காட்சி மற்றும் அதனை ஒத்த பிற சாதனங்கள் வாயிலாக மக்கள் பார்வைக்கு எடுத்து செல்லக்கூடாது. இது அனைத்து மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களையும் உள்ளடங்கியது. பொது மக்களை ஈர்க்கும் விதத்தில் எவ்வித இசை நிகழ்ச்சி, நாடக நிகழ்ச்சி அல்லது ஏதேனும் பொழுதுபொக்கு நிகழ்ச்சியின் வாயிலாக தேர்தல் சார்ந்த எந்த தகவலையும் மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது. மேற்கண்ட விதிகளை மீறுபவர்களுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பிரச்சார காலம் முடிவடையும் நிலையில், அரசியல் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் இதர பொறுப்பாளர்கள் முன்னிலையில் எந்தவொரு பிரச்சாரமும் தொகுதிக்குள் நடக்கக்கூடாது. நேர்மையான மற்றும் சுமூகமான தேர்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தாவண்ணம், தேர்தல் பிரச்சாரத்திற்காக தொகுதிக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்களாக இல்லாதவர்கள் பிரச்சாரம் முடிந்து தொகுதியில் தொடர்ந்து இருக்கக்கூடாது வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி 17.04.2024 அன்று மாலை 06.00 மணிக்கு பிறகு செல்லத்தகாதது ஆகிவிடும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளருக்கு ஒரு வாகனமும், அவரது முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும் மற்றும் அவரது கட்சி தொழிலாளர்கள், முகவர்கள், கட்சி தொண்டர்கள் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம். எந்தவொரு வேட்பாளரும் வாடகை வாகனத்திலோ அல்லது அவருக்கென அனுமதிக்கப்பட்ட வாகனத்திலோ வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அல்லது வாக்குச்சாவடியிலிருந்து அழைத்து சென்றால், வந்தாலோ மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 133 இன் கீழ் தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தற்காலிக சேவை மையம் அலுவலகத்தை வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் 2 நபர்களை கொண்டு அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் தேவையற்ற கூட்டங்களை சேர்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அத்தகைய அலுவலகங்களை கையாள்பவர்கள் அந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். குற்றக்குறிப்பு நிலுவையிலுள்ள நபர்களை அத்தகைய சேவை மையத்தை கையாள அனுமதிக்கக்கூடாது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட தொகுதிக்குள் எந்தெவாரு பொது இடத்திலும் சட்டவிரோதமான கூட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களை நடப்பதை தவிர்க்கும் பொருட்டு தேவையேற்படின் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973, பிரிவு 144 இன் கீழ் தேர்தல் நடத்தும் அலுவலரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இந்த மக்களவை பொதுத் தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடத்திட ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story