மின்னணு எந்திரங்களில் வாக்குப்பதிவு செய்து பரிசோதனை!

மின்னணு எந்திரங்களில் வாக்குப்பதிவு செய்து பரிசோதனை!

பரிசோதனை

ஆரணி தாலுகா அலுவலகத்தில் மின்னணு எந்திரங்களில் வாக்குப்பதிவு செய்து பரிசோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி சட்டமன்ற தொகுதியில் 311 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 சதவீதம் கூடுதலாக மொத்தம் 374 வாக்குச்சாவடிக்கு அனுப்ப வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆரணி தாலுகா அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன. இதில் 19 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தலா 1000 வாக்குப்பதிவுகள் முறையாக பதிவாகிறதா? என பரிசோதனை வாக்குப்பதிவு செய்யும் பணி ஆரணி உதவி ஆட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.அப்போது தாசில்தார் ரா.மஞ்சுளா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story