கடலூர் முதுநகர் துறைமுகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு 

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் வாக்களிப்பு விழிப்புணர்வு நடைப்பெற்றது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-னை முன்னிட்டு கடலூர் முதுநகர் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து "வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்போம்” என்ற தலைப்பில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் இன்று (06.04.2024) அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பழனி, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) திரு.வேல்முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி (பொ) ஆகியோர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story