இளம் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆட்சியர்

இளம் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆட்சியர்

துண்டு பிரசுரங்கள் வழங்குதல் 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை இளம் வாக்காளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (28.03.2024) வழங்கினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story