தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு !

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு !

தேர்தல் பணி

மேட்டூரில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேட்டூர் அருகே மாதையன் குட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டு செலுத்தும் பணி மேட்டூர் அருகே மாதையன் குட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,600 ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாக்கு பெட்டியில் தபால் செலுத்தினர்.

Tags

Next Story