வாக்குப்பதிவு இயந்திரங்கள்; கலெக்டர் நேரில் ஆய்வு

திருப்பத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அண்ணா நகர் பகுதியிலுள்ள மஞ்சா குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தெரித்து கொள்ளும் வகையில் வாக்கு பதிவு இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு, தாசில்தார்கள் சிவப்பிரகாசம், குமார், சாந்தி மற்றும் தேர்தல் பிரிவு தாசில்தார் பத்மநாபன் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story