கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர்தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு, இளநிலை, முதுநிலை பெயர் மாற்ற விதித்திருத்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 2-வது நாளாக பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க கீழ்வேளூர் வட்டத் தலைவர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் லட்சுமி, வட்ட நிர்வாகிகள் ராம்குமார் , பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story