தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் கைது

தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி  காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் கைது

கைது செய்யப்பட்ட விவசாயிகள்

கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி கால்வாயில் புஞ்சை பாசனத்திற்கு பாசனத்திற்கு ஐந்து நினைப்பிற்கு தண்ணீர் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டும் . ஆனால் தற்போது பவானிசாகர் அணையில் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் விளைந்த பயிர்கள் கருகுவதை தடுக்க ஐந்தாம் நினைப்பிற்கு பத்து நாட்களாவது தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கீழ்பவானி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத்தால் விவசாயிகள் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அதிகாரிகள் , காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story